Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைத்தது எப்படி? இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்! #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்துக்கு நடிகர்களைத் தேடும் பொழுது, அனைவருக்கும் உடனே சிவகார்த்திகேயனின் பெயர்தான் நினைவுக்கு வந்தது. படம் முடிவடையும் தருவாயில், ஒவ்வொரு முறையும் படத்தைப் பார்ப்பதில், சிவகார்த்திகேயனே சரியான தேர்வு என தோன்றியது. படத்தின் திரைக்கதை மற்றும் தகவல்களை ராணுவ அதிகாரிகளின் அனுமதி பெற அனுப்பிய பிறகு, அனுமதி கிடைத்தது. அதன் பிறகு, படம் முழுமையாக முடிந்தபின் அதிகாரிகளுக்கு முன்னிலையில் திரையிட்டோம். மேலும், அக்டோபர் 23-ஆம் தேதி டெல்லியில் ராணுவ வீரர்களுக்காகவும் திரையிட்டோம் என தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 22-ஆம் தேதி எனது பிறந்த நாளில், முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினர் இந்த படத்தைப் பார்த்தார்கள். கமல் சார் படத்தைப் பார்த்து மதிப்பளித்ததும், தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என்று கூறினார். அவர் படத்தைப் பார்த்து பல பாராட்டுகள் தெரிவித்தார். கமல் சார் என்னென்ன குறிப்புகளைச் சொல்லியுள்ளார் என்பதைக் கொஞ்சம் கூடுதலாக சொல்ல வேண்டுமென்று அவர் பின்பற்ற வேண்டிய உத்திகளைத் தெளிவுபடுத்தியுள்ளார், இதை நான் படம் வெளியான பிறகு பகிர்வேன். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ எனும் தலைப்பு சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது, ஏனெனில் அந்த சொல்லின் பொருள் ‘மரணமில்லாதவன்’ என்பதாகும்,” என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது, டெல்லியில் அமர் ஜவான் ஜோதி என்ற இடம் உள்ளது, அங்கு மறைந்த ராணுவ வீரர்களின் நினைவாக விளக்கு ஏற்றப்படுகின்றது. ‘அமர் ஜவான்’ என்பதன் பொருள் ‘மறைந்த வீரன்’ ஆகும். அதனால் இந்த தலைப்பு சரியானதென தோன்றியது. பழைய படங்களின் தலைப்புகளை புதிய படத்திற்கு பயன்படுத்த சில நடைமுறைகள் உள்ளன; அவற்றைக் கவனமாக பின்பற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து இந்த தலைப்பை பெற்றோம், என்றார்.

- Advertisement -

Read more

Local News