பிரபல இயக்குநர் அட்லியின் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் துவங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம், அல்லு அர்ஜுனின் 22வது திரைப்படமாகவும், அட்லியின் 6வது படமாகவும் உருவாகிறது.

கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், மற்ற கதாநாயகிகளாக மிருணாள் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று முதல் அல்லு அர்ஜுன் மற்றும் மிருணாள் தாகூருடன் தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தீபிகா படுகோனே சில வாரங்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தகவல் உள்ளது. இந்தப் படம் சரித்திரமும் நவீன காலமும் இணைந்து உருவாகிய பேன்டஸி வகை படம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘புஷ்பா 2’ படத்தின் மூலம் அல்லு அர்ஜுனும், ‘ஜவான்’ படத்தின் மூலம் அட்லியும் 1000 கோடி கிளப்பில் இணைந்தவர்கள். இப்போது அவர்கள் இணையும் இந்தப் புதிய படம் எந்த அளவுக்குள் வசூலிக்கப் போகிறது என்பதைப் பற்றி ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.