ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் வெற்றியால், இயக்குநர் விபின் தாஸ் புகழ்பெற்ற இயக்குநராக மாறினார். இவர் இயக்கும் அடுத்த படங்களை மோகன்லால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, ஃபக்த் ஃபாசில் வைத்து இயக்க திட்டமிட்டு இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் விபின் தாஸ் கூறியதாவது: மோகன்லால் அவர்களிடம் ஒரு கதை கூறியிருந்தேன், ஆனால் அவர் அதை விரும்பவில்லை. இதனால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அடுத்து, எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஃபக்த் ஃபாசில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேதி மற்றும் பட்ஜெட் குறித்த பிரச்சனைகளால் அந்தப் படமும் கைவிடப்பட்டது.
இப்போது, இவர்களுக்குப் பதிலாக மற்ற இரண்டு நடிகர்களை வைத்து அந்தப் படத்தை விரைவில் தொடங்க உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், விபின் தாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான மற்றும் வெற்றிபெற்ற வாழை திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.