சினிமா படப்பிடிப்பில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் நேற்று கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடிக்கு சென்றார். அவர் அங்கு 4 நாட்கள் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். மே 5ம் தேதி அவர் சென்னை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ள நிலையில், அங்கு கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக விஜய்யின் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இருந்தும், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், விஜய்யை காணவதற்காக அங்கு அதிகமான ரசிகர்கள் கூடினார்கள்.
மேலும் படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு செல்லும் வழி எல்லாம் மக்களும் ரசிகர்களும் விஜய்யின் வாகனத்தை கண்டு சூழ்ந்து கொண்டனர்.