Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

அமரன் படம் குறித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி! #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவகார்த்திகேயன் நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘அமரன்’ படத்தில் முகுந்த் வரதராஜன் அடையாளத்தை மறைத்ததாகப் சிலர் குற்றம் கூறியுள்ளனர். இதற்கு பதிலளித்த இயக்குநர் ராஜ்குமார், படத்தின் வெற்றி விழாவில், முகுந்த் வரதராஜன் தமிழன் மற்றும் இந்தியனாக அடையாளம் கொடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். பின்னர், அமரன் படத்தில் சிறுபான்மையினர் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் என கூறி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் படத்திற்கு தடை விதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அமரன் படம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்குமார், “படத்தின் சென்சார் அக்டோபர் மாத கடைசி வாரத்தில் நடைபெற்றது. அக்டோபர் 1ஆம் தேதி மத்திய பாதுகாப்புத் துறையும் ஏ.டி.ஜி.பி.ஐயும் படத்தைப் பார்த்து அனுமதி அளித்தனர். ராணுவத்தை சார்ந்த படங்களை எடுத்தால், அவர்களின் அனுமதியின்றி வெளியிட இயலாது. சிலர் அவர்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்துக் கொண்டு பேசுகிறார்கள். அது உண்மையா என்பதை அறிந்துவிட்டுத் பேச வேண்டும். ஒவ்வொரு ரெஜிமென்ட்டுக்கும் தனித்தனி போர்க்குரல், நோக்கங்கள் இருக்கின்றன.

மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் ‘வீர மாதரசி அடி கொல், அடி கொல், அடி கொல்’ என கூறப்படும். அதுபோல் ‘துர்கா மாதா கி ஜே’ என்றபடியும் உள்ளது. ‘போல் பஜ்ரங் பாலி கி ஜே’ என்பது ராஜ்புட் ரெஜிமென்டின் 44 RR பெட்டாலியனின் போர்க்குரல். அதை மாற்றி எடுக்க இயலாது; மாற்றினால் தவறாகிவிடும். இது அரசியல் பார்வையோ அல்லது எனது சொந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான படம் அல்ல. எனக்கும் சொந்தமான கருத்துகள் இருக்கும்; அவற்றை கதாபாத்திரங்களின் வாயிலாகத் திணிக்கக் கூடாது என்பதில் இயக்குநராக நான் தெளிவாக இருக்கிறேன். எங்களுக்கு சமூகப் பொறுப்பும் உள்ளது. அவற்றை பேணிக் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளோம் என நம்புகிறேன்” என Rajkumar விளக்கமளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News