பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்த ‘தேவரா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது ராம் சரணுடன் ‘பெத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ராம் சரணுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து ஜான்வி கபூர் கூறுகையில், “ராம் சரண் மீது எனக்கு மிகுந்த அன்பு உள்ளது. அவர் மிகுந்த ஆற்றல் கொண்ட அற்புதமான ஜென்டில்மேன். விடாமுயற்சியும் நேர்மையும் கொண்டவர். பெரிய நடிகராக இருந்தாலும் கூட, படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு மாணவரைப்போல வருவார். அவருடைய அந்த எளிமை எனக்கு மிகவும் பிடித்தது.
மேலும், படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நிறைய ஒத்துழைப்பை வழங்கினார். அதோடு, படப்பிடிப்பு தளத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தேன். காரணம், இப்படத்தில் எனக்கு ஒரு வித்தியாசமான, சுவாரஸ்யமான கதாபாத்திரத்தை இயக்குனர் பூச்சி பாபு கொடுத்துள்ளார்” என தெரிவித்துள்ளார் ஜான்வி கபூர்.