சட்டத்திற்கு விரோதமாக போதைப்பொருட்களை யாராக இருந்தாலும் பயன்படுத்துவது தவறுதான் என்கிற கருத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற “3BHK” படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவரிடம், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா போதைப்பொருட்கள் பயன்படுத்தி கைதான சம்பவம் குறித்து கேட்டபோது, “யார் இதை செய்தாலும் தவறு தவறுதான்” என்று பதிலளித்தார்.மேலும், குறைந்த பட்ஜெட் படங்கள் பற்றி கேட்டபோது, “மக்களுக்கு தொடர்பு ஏற்படும் படங்கள் எதுவாக இருந்தாலும் ஓடிவிடும்” என்று கூறினார்.
சித்தார்த் நடித்துள்ள “3BHK” திரைப்படம், ‘மிஸ் யூ’ படத்திற்கு பிந்தையாக வருகிறது. இதில் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் ஜூலை 4ம் தேதி வெளியாக உள்ளது.இதே நேரத்தில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார். அடுத்ததாக தனுஷின் “டி56” என்ற படத்தையும் அவர் இயக்க உள்ளார்.