‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற படங்களை இயக்கிய வினோத், அதன் பின்னர் அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ என்ற அரசியல் பின்னணியைக் கொண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகை நாளில் திரைக்கு வரவுள்ளது.

விஜய் படம் முடிந்ததும், வினோத் இயக்கும் அடுத்த படம் தனுஷ் நடிப்பில் உருவாகும் என இதற்கு முன்பே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், சமீபத்தில் வினோத், ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, ஒரு கதை கூறியதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில், வினோத் தனது கதையின் ஒன் லைனைக் கூறி, அதன் பின்னர் அந்தக் கதையை விரிவுபடுத்தி, மீண்டும் ரஜினியை சந்தித்து சொல்லியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
தற்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வரும் ரஜினி, அதற்குப் பிறகு வினோத் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.