சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் சேகர் கம்முலா தனுஷின் குபேரா படம் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், “இது என் முதலாவது பான் இந்தியா திரைப்படம். பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தனித்தனியாக படமாக்கினோம். அப்போதுதான் ‘லிப் சின்க்’ சரியாக இருக்கும்.

ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு படங்களை உருவாக்குவது போல இது இருந்தது. அதனால், படப்பிடிப்புக்கு நேரம் அதிகமாக எடுத்துக்கொண்டது.
படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் பான் இந்தியா படமென வரும்போது முற்றிலும் வேறுபட்ட அளவுக்கு இருக்கும். ஒவ்வொரு பாடலும், வசனமும், அனைத்தும் அனைத்து மொழிகளிலும் சரியாக இருக்கவேண்டும் என்பது மிகப்பெரிய பொறுப்பாகும்” என தெரிவித்துள்ளார்.