மறைந்த நடிகர் முரளியின் மகனும், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அதர்வா, 2010ஆம் ஆண்டு வெளியான ‘பாணா காத்தாடி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

கடந்த 15 ஆண்டுகளாக வெற்றி, தோல்வி என பல்வேறு அனுபவங்களை சந்தித்தபடியே தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘டிஎன்ஏ’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாவதற்காக தயாராக உள்ளது.
இந்நிலையில் அதர்வா, ‘வலை’ எனும் புதிய ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக ராமேஸ்வரத்தில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த திரைப்படம் குறித்து முழுமையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.