தெலுங்கு சினிமாவில் அதிரடி ஆக்ஷன் நடிகரான என்.டி.பாலகிருஷ்ணா, கையால் ரயிலை நிறுத்துவது, இரு கைகளில் இரண்டு கார்களை தூக்கி அடிப்பது, ஒரே நேரத்தில் பத்து பேரை அடித்து பறக்கவிடுவது போன்ற அதிரடி காட்சிகளால் புகழ்பெற்றவர். அவரது ரசிகர்கள் இதை ரசித்தாலும், பொதுமக்களிடையே இது பரவலாக விமர்சனங்களுக்கும் உள்ளாகும்.

தற்போது அவர் நடித்து வரும் “அகண்டா 2: தாண்டவம்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் திரிசூலம் தனது தோள்பட்டைகளில் சுழன்று தன்னை அழிக்க வரும் அனைவரும் வெட்டி வீசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்கி இருக்கிறார். ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா மற்றும் எம். தேஜஸ்வினி நந்தமுரி இப்படத்தை தயாரித்துள்ளனர். படம் பான் இந்திய வெளியீடாக, செப்டம்பர் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த டீசரில் காணப்படும் காட்சிகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி பாலகிருஷ்ணா கூறியிருப்பதாவது: “எனது ரசிகர்கள் அதிரடி காட்சிகளை மிகவும் விரும்புகிறார்கள். அவர்களை திருப்திப்படுத்துவது மிகவும் கடினம். எனது படங்களில் அவர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகம். எனவே அவர்கள் விரும்பும் விதமாகக் காட்சிகள் அமைக்கப்படும். அதில் லாஜிக் முக்கியமல்ல. ரசிகர்களின் மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே என் கடமை. அதற்காக எந்தவொரு ஆபத்தையும் ஏற்க தயார் என தெரிவித்துள்ளார்.