பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ் படுகோனே, இந்தியாவின் முன்னாள் பாட்மின்டன் சாம்பியன் ஆவார்.தந்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில், மற்றும் எதிர்கால தலைமுறைக்குப் பாட்மின்டன் பயிற்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை, கோவை, பெங்களூரு, மைசூர், மும்பை உள்ளிட்ட 75 நகரங்களில் இந்த பயிற்சி மையங்களைத் துவக்கியுள்ளார்.

இந்நிலையில், தனது தந்தையின் 70வது பிறந்த நாளான ஜூன் 10ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 75 நகரங்களில் பாட்மின்டன் பயிற்சி மையங்களை துவக்கியுள்ளார்.
2027-ம் ஆண்டுக்குள் 250 நகரங்களில் இந்த மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளார். “பாட்மின்டன் அனைவருக்கும்” என்ற எண்ணத்தைக் கொண்டு இந்த முயற்சியை தீபிகா செயல்படுத்த ஆரம்பித்துள்ளார்.