தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சிம்ரன், தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார். கே. பாலச்சந்தர் இயக்கிய ‘பார்த்தாலே பரவசம்’, மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, மற்றும் ‘ராக்கெட்ரி’ போன்ற படங்களில் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், நடன அழகியாக பாராட்டப்பட்டவர்.

திருமணத்துக்குப் பிறகு சிம்ரன் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி, தற்போது கதாநாயகியாக நடிக்கவிட்டாலும் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது, சசிகுமாருடன் நடித்துவரும் ‘டூரிஸ்ட் பேமிலி’ என்ற திரைப்படமும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
சமீபத்தில் நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், தனது மகன் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றதைப் பற்றிய புகைப்படத்துடன், “சில ஆண்டுகளுக்கு முன் என் கைகளில் இருந்த என் மகன் இன்று பட்டம் பெற்றிருப்பதைப் பார்க்கும் போது பெருமிதமாக உள்ளது. எங்களைவிட உயர்ந்து வளர்ந்து வருகிறான். நீ எங்களை பெருமைப்படுத்தி விட்டாய்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.