Monday, October 21, 2024

இனி காதல் திருமணம் பற்றி யோசிக்கவே மாட்டேன்… சின்னத்திரை பிரபலம் புலம்பல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சந்தியா ராகம்’ சீரியல் மிகவும் பிரபலமானது. இதில் சந்தியா ஜகர்லாமுடி, அண்டாரா சவர்னாகர், பாவனா லாஸ்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அண்டாரா, மாயா கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர் கனவு கன்னியாகக் கொண்டாடப்படுகிறார்.

சமீபத்தில், அவர் அளித்த பேட்டியில், ‘நான் ஒருவரை காதலித்தேன். அவர் எனது பிறந்தநாளன்று அழகாக வாழ்த்தி, என்னை காதலிக்கின்றேன் என்று கூறினார். ஆனால் அந்த காதல் முறிந்து விட்டது. இனி காதல் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை மணந்துகொள்வேன்’ என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News