மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் உள்ளிட்டோர் நடித்த ‘பாம்பே’ படம் 1995-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் முதலில் ஹீரோவாக தேர்வானவர் நடிகர் விக்ரம்தான். அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில காட்சிகளிலும் நடித்திருந்தார்.
அந்த நேரத்தில் விக்ரம், விக்ரமன் இயக்கத்தில் உருவாகிய ‘புதிய மன்னர்கள்’ படத்திற்காக தாடி வளர்த்திருந்தார். ஆனால், மணிரத்னம் அவருக்கு தாடியையும், மீசையையும் ஷேவ் செய்யச் சொல்லியதாகவும், அது மட்டுமே முடியாது என்று கூறி விக்ரம் படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. இறுதியில், அந்த கதாபாத்திரம் அரவிந்த சாமிக்குச் சென்றது.
மணி சாருடன் பணியாற்றுவது எனக்கு ஒரு கனவு. அந்த வாய்ப்பை இழந்த பிறகு, 2 மாதங்கள் தினமும் காலை எழுந்ததும் அந்த நினைவால் அழுதேன். பின்னர், மணிரத்னம் சார் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன், என விக்ரம் பகிர்ந்துள்ளார்.முதலில் ‘பாம்பே’ படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும், மணிரத்னத்துடன் பணியாற்ற வேண்டும் என்ற விக்ரத்தின் கனவு பின்னர் நிறைவேறியது. 2010-ஆம் ஆண்டு வெளியான ‘ராவணன்’ படத்தில் ராவணனாகவும், ‘பொன்னியின் செல்வன்: I’ மற்றும் ‘II’ திரைப்படங்களிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .