ஹாரர் படமான‘‘அருந்ததி’’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவரது திரைப்பட பயணத்தில் மிக முக்கியமான படமாக ‘‘பாகுபலி’’ அமைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, கடைசியாக நடித்த படம் ‘‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’’ ஆகும்.
தற்போது, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள தனது 50-வது திரைப்படமான ‘‘காதி’’யில் நடித்துள்ளார். இதில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில காரணங்களால் வெளியீடு தள்ளிப்போயிருந்தது.
தற்போது, ‘‘காதி’’ திரைப்படத்தின் முதல் பாடல் (பர்ஸ்ட் சிங்கிள்) ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.