‘ஆஹா கல்யாணம்’ தொடரில் பவி டீச்சர் கதாபாத்திரம் மூலம் பிரபலமான பிரிகிடா சாகா, நடிகர் ஆனந்த் ராமை காதலித்து வந்தார். இருவரும் சமீபத்தில் தங்களது காதலை வெளிப்படுத்தியதுடன், திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்றது. திருமண புகைப்படத்தை பகிர்ந்த பிரிகிடா, தங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அவர்களின் ஆசீர்வாதத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Add a Comment
