நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பழந்தமிழ் இலக்கியங்களை எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சென்றதுடன், பட்டிமன்றம் மூலம் பல மாணவர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பை கமல்ஹாசன் நினைவுகூர்ந்துள்ளார். நிறைவான வாழ்க்கையில் பெரும் பணிகளைச் செய்து மறைந்துள்ள சாலமன் பாப்பையாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அவரது குடும்பத்தினருக்கும் மாணவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Add a Comment
