‘சேயோன்’ படப்பிடிப்பை நிறைவு செய்த பாக்யஸ்ரீ போர்ஸ்!

‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான பாக்யஸ்ரீ போர்ஸ், அதன் பிறகு ‘காந்தா’, ‘கிங்டம்’, ‘ஆந்திரா கிங் தாலுகா’ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார். ஆனால் அவர் நடித்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வணிக வெற்றியை பெறாததால், அந்த காலகட்டத்தில் அவரது நடிப்புத் தேர்வுகள் மற்றும் திரைப்பயணம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார்.

தற்போது அந்த நிலை மாறும் வகையில், சமீபத்தில் வெளியான ‘லெனின்’ திரைப்படம் பாக்யஸ்ரீ போர்ஸுக்கு சாதகமான வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தில் மீண்டும் நம்பிக்கையை பெற்றுள்ள அவர், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேஷன் இயக்கி வருகிறார். மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் ஆக்‌ஷன், நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாக்யஸ்ரீ போர்ஸ் தனது பங்கிற்கான காட்சிகளை தற்போது முழுமையாக நிறைவு செய்துள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, படக்குழு அடுத்தகட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading