கொடைக்கானலில் உள்ள கான்வென்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த நடிகரும் இயக்குநருமான சசிகுமார், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது கல்வி நிறுவனத்திற்கு மீண்டும் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும், தனது கனவுகள் உருவானதும், நட்புகள் மலர்ந்ததும், அழியாத நினைவுகள் உருவானதுமான அந்த இடத்திற்கு மீண்டும் வந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Add a Comment
