தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். ஆகஸ்ட் 1ஆம் தேதி இவரது `தி ஒன்’ இசை கச்சேரி நடைபெற உள்ளது. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “ `அரசன்’ படத்துக்கு நீங்கள் இசையமைக்கவில்லையே ஏன்” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தபோது, “ஒரு படத்தை எடுப்பதற்குள் இயக்குநர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தால்தான் புரியும். அதற்குள் பல சவால்கள் இருக்கும், இதில் ஏன் என்னைச் சேர்க்கவில்லை என்று கேட்பது சரியாக இருக்காது, இயக்குனர்களின் தேர்வில் நாம் கருத்து சொல்வது சரியாக இருக்காது என கூறியுள்ளார்.
Add a Comment
