நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் ஆஷ்னா சவேரி, அவ்வப்போது தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஆனால், அந்த புகைப்படங்களின் பின்னணியில் மதுபான பாட்டில்கள் இடம்பெற்றிருந்தது சமூக வலைதள பயனர்களின் கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, “புகைப்படம் எடுக்க வேறு இடம் கிடைக்கவில்லையா?”, “இதுதான் உங்களுக்குப் பிடித்த இடமா?” போன்ற கேள்விகளை எழுப்பி சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவை நடிகை ஆஷ்னா சவேரிக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகின்றன.
