நடிகை காஜல் அகர்வால், தனது புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமீபத்திய பேட்டியில் திரைப்படங்களில் தனது எல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
“பிகினி உடையில் திரையில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அது முற்றிலும் எனது தனிப்பட்ட முடிவு. அதேபோல், அளவுக்கு அதிகமான நெருக்கமான காட்சிகளிலும் நடிக்க நான் தயாராக இல்லை. அந்த மாதிரியான காட்சிகள் இருந்தால், எவ்வளவு பெரிய படம் அல்லது முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் நான் மறுத்துவிடுவேன்,” என்று காஜல் தெரிவித்தார்.
மேலும், “ஒரு நடிகராக நமக்கென்று ஒரு எல்லையை நாமே நிர்ணயிக்க வேண்டும். அந்தக் கொள்கையை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்,” என்று தனது நிலைப்பாட்டை உறுதியாக விளக்கினார்.
