‘துரந்தர்’ படத்தின் இரண்டு பாங்களில் நடிக்க ரன்வீர் சிங் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில்தான் ஒப்பந்தம் போட்டிருந்தாராம். முதல் பாகம் 1400 கோடியும், இரண்டாம் பாகம் 1800 கோடியும் என மொத்தம் 3200 கோடிக்கு மேல் வசூலித்தது. அந்தப் படங்களின் மூலம் தன்னுடைய லாப பங்காக ரன்வீர் சிங்கிற்கு 320 கோடி கிடைத்துள்ளதாம். இப்படத்திற்காக அவர் சிறு அளவில் முதலீடு செய்ததாகவும் சொல்கிறார்கள். படத்தின் தியேட்டர் உரிமை, சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை, இசை உரிமை ஆகிய அனைத்தின் மூலமும் அவர் இந்த லாபப் பங்கைப் பெற்றுள்ளார்.
Add a Comment
