‘ஜனநாயகன்’ திரைப்படம் வர வேண்டிய நேரத்தில் வரும்… இயக்குனர் ஹெச் வினோத் டாக்!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், முதலமைச்சர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த திரைப்படம் முதலில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சில நடைமுறைச் சிக்கல்களால் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் விஜய் அரசியல் பயணத்தில் முக்கிய முன்னேற்றத்தை அடைந்து முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திரைப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது வெளியாகி வரும் தகவல்களின் படி, இந்த திரைப்படம் ஜூன் மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் திரையரங்குகளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் இயக்குநர் எச். வினோத்திடம் ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திரைப்படம் வர வேண்டிய நேரத்தில் வரும். தற்போதைக்கு அதன் வெளியீட்டு தேதியை என்னால் உறுதியாக கூற முடியாது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading