ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் ‘திரிஷ்யம் 3’. இப்படம் 58 மணி நேரத்தில் 100 கோடி வசூலைப் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்கடுத்து வசூல் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.இதனிடையே, நேற்றுடன் முடிந்த முதல் வார இறுதியில் இப்படம் 140 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 63 கோடியும், வெளிநாடுகளில் 78 கோடியும் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். இந்திய வசூலை விட வெளிநாடுகளில் வசிக்கும் மலையாள சினிமா ரசிகர்கள் இந்தப் படத்திற்கு நல்ல ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள்.
Add a Comment
