’29’ படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார். அதன் பின்னர் மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களுக்கு கூடுதல் திரைக்கதை, வசனம் எழுதினார். தற்போது சர்தார் 2, கராத்தே பாபு ஆகிய படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். சிறிய இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனங்களின் தயாரிப்பில் ’29’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.இதில் நாயகனாக ‛ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த விதுவும், நாயகியாக பிரீத்தி அஸ்ரானியும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். வருகின்ற மே 8ம் தேதியன்று படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading