மிருணாள் தாக்கூர் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறாரா தனுஷ்? உலாவும் புது தகவல்!

தனுஷ், இயக்குனராக ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது, தனது 55வது படமாக உருவாகும் திட்டத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகராகவும் அவரிடம் பல படங்கள் காத்திருக்கின்றன. இந்த சூழலில், மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கும் பணிக்காக தனுஷ் தயாராகி வருகிறார்.

இந்த புதிய திரைப்படத்தில், மிருணாள் தாகூர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1960–70 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு இந்த படம் ஒரு பீரியட் கதையாக உருவாக்கப்பட இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இந்த படத்திற்கான புகைப்படப் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், மிருணாள் தாகூர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் திரைப்படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading