Saturday, September 14, 2024

தேவரா க்ளைமாக்ஸ் காட்சிகள் தீப்பொறி தான்… அனல் பறக்கும் அப்டேட் சொன்ன என்டிஆர் ! #DEVARA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள “தேவரா”. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து, தெலுங்கு திரை உலகில் தனது முதல் படி எடுத்து வைத்துள்ளார். மேலும், பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“ஆர்ஆர்ஆர்” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் என்பதால், “தேவரா” படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏற்கனவே மிகுந்துள்ளது. அதற்கு மேலாக, ஜூனியர் என்டிஆர் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதோடு, படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்பதும் ரசிகர்களின் ஆவலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், “தேவரா” படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகவுள்ளது, அதற்கு முன்பாக சமீபத்தில் அதன் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில் ஜூனியர் என்டிஆர் பேசுகையில், “இந்த படத்தில் இருக்கும் எந்த ஒரு குறிப்பிட்ட காட்சியைப் பற்றியும் நான் வெளிப்படையாகப் பேச முடியாது. ஆனால், ஒவ்வொரு காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கடைசி 30 முதல் 40 நிமிடங்கள் தீப்பொறி பறக்கும் விதமாக, ரசிகர்களை மிகுந்த உற்சாகத்துடன் ஈர்க்கும் என்று உறுதியாக சொல்லலாம். இந்த படத்தை ரசிகர்கள் விரைவில் பார்க்க வேண்டும் என்று எண்ணும் அவசரத்தை அடக்க முடியாமல் இருக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News