தென்னிந்திய திரைப்படத் துறையில் இளம் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி தற்போது தமிழில், நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘வா வாத்தியார்’, ‘ஜீனி’ ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டியின் படங்கள் தொடர்ச்சியாக வெளியாக இருக்கின்றன.

இந்த நிலையில், கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு பேசும்போது, கோவையின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் இங்கு பேசப்படும் தமிழ் என அனைத்தும் தான் மிகவும் விரும்பும் அம்சங்களாக உள்ளன என்று குறிப்பிட்டார். மேலும், கோவையில் பெற்ற அன்பும், மக்களின் வரவேற்பும் தன்னைக் கண்கலங்க வைத்ததாக தெரிவித்தார்.
நான் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் என அவர் கூறினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளை பெற்றுவருகிறது.