மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தை பிடித்தார் மாரி செல்வராஜ். அதன் பிறகு, தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார், அது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்த ஆண்டு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாம்மன்னன் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம், உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி படம் ஆகும்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000039756-1.jpg)
தற்போது, வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி தயாரிக்கிறார். இதில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மாரி செல்வராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000038998-2.jpg)
சந்தோஷ் நாராயணன் வாழை படத்திற்கு இசையமைத்துள்ளார். மாரி இயக்கிய பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படங்களுக்கும் அவர் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.படத்தின் முதல் பாடலான தென்கிழக்கு கடந்த வாரம் வெளியானது மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த பாடல் யூடியூபில் 28 லட்ச பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அடுத்த பாடலான `ஒரு ஊர்ல ராஜா’ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலின் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடலில் தவில், பம்பல், தாளம், உறுமி போன்ற இசைக் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகிறது.