நடிகை ராஷி கன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ரத்தக் காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அதாவது, ஒரு படத்தின் படப்பிடிப்பு நேரத்தில், ராஷி கன்னா உயரமான மேடையிலிருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்
இந்த விபத்தின் போது, அவரது மூக்கு, கைகள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வடியும் நிலைக்கு சென்றது. உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சில நாட்கள் ஓய்வும் அவசியமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தைப் பற்றிய பதிவில், ராஷி கன்னா “சில கதாபாத்திரங்களுக்காக தேவையானதைச் செய்துதான் ஆக வேண்டும். ஏற்படும் காயங்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது. நாமே ஒரு புயலாகிவிட்ட பிறகு, இடி-மின்னல் என்ன செய்யும்?” எனத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், ராஷி கன்னா விரைவில் குணமடைய ரசிகர்கள் தனது இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.