தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்தவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது திரையுலகில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

2003ஆம் ஆண்டு ராகவேந்திர ராவ் இயக்கத்தில் வெளியான ‘கங்கோத்ரி’ படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் சினிமாவில் அறிமுகமானாரஅதைத் தொடர்ந்து, ‘ஆர்யா’, ‘பருகு’, ‘பன்னி’, ‘ஜூலாய்’, ‘ரேஸ் குர்ரம்’, ‘S/o சத்யமூர்த்தி’, ‘சர்ரைனோடு’, ‘அல வைகுந்தபுரமுலு’, மற்றும் ‘புஷ்பா’ ஆகிய படங்கள் அவரது தொழில் வாழ்க்கையில் சிறந்த படங்களாக அமைந்தன.தெலுங்கு சினிமா வரலாற்றில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை முதல்முறையாகப் பெற்றவர் அல்லு அர்ஜுன். ‘புஷ்பா தி ரைஸ்’ படத்தில் அவரது நடிப்பு அவருக்கு இந்த விருதைப் பெற்றுத் தந்தது.
சமீபத்தில் வெளியான அவரது பான்-இந்தியா படமான ‘புஷ்பா தி ரூல்’, ‘தங்கல்’ படத்துக்கு அடுத்தபடியாக அதிக வசூல் செய்த இரண்டாவது இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. அல்லு அர்ஜுன் அடுத்ததாக இயக்குநர் அட்லியுடன் இணையவுள்ளார்.