Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நான் என்ன சாதித்தாலும் அது தமிழ் மண்ணுக்கு சொந்தமாகும்… நானும் சென்னை பையன் தான்… நெகிழ்ச்சியுடன் பேசிய அல்லு அர்ஜுன்! #Pushpa 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அதன் இரண்டாவது பாகம் தயாராகி, அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியிடப்படுகிறது. தமிழில் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக விழாவும், படத்தில் ஸ்ரீலீலா நடனம் இடம்பெற்றுள்ள பாடல் வெளியீட்டு விழாவும் நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன் பேசியதாவது,

“இன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். நான் இத்தனை ஆண்டுகள் எதற்காக காத்திருந்தேனோ, அதுதான் இன்று நடந்திருக்கிறது. இதற்கு முன்பு சென்னையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இவ்வளவு பெரிய மேடையில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. ஒரு மனிதன் தனது வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகளை எங்கு வாழ்கிறாரோ, அந்த மண்ணுக்கே அவர் செய்த சாதனைகள் சொந்தமாகும் என்பார்கள். அந்த வகையில், இந்திய அளவில் அல்லது உலக அளவில் நான் என்ன சாதித்தாலும் அது இந்த தமிழ் மண்ணுக்கு சொந்தமாகும். நான் இன்னும் என்னை ஒரு சாதாரண தி.நகர் பையனாகவே நினைக்கிறேன். என் ஆணிவேர்கள் சென்னையில்தான் இருக்கின்றன.

நான் எந்த நாட்டுக்குப் போனாலும், அந்த நாட்டின் மொழி எனக்கு தெரிந்தால், அதில் பேசுவேன். தமிழ் எனக்கு நன்றாக தெரியும், அதனால் இங்கு வந்தால் தமிழில்தான் பேசுவேன். தமிழ் எனக்கு மிகவும் பிடித்த மொழி, என்னை வாழ வைத்த மொழி. மூன்று ஆண்டுகள் கடின உழைப்பின் மூலம் ‘புஷ்பா 2’ உருவாகியுள்ளது. இது தெலுங்கு படம் அல்ல; இந்திய படம். ‘ஒரே நாடு, ஒரே சினிமா’ என்பதே எனது கொள்கை.”

- Advertisement -

Read more

Local News