தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து துல்கர் சல்மானின் வேபேரர் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘காந்தா’. இந்த படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார் . இதனை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சமுத்திரக்கனி, ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேற்று திரைக்கு வந்தது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், வெகுஜன ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதன் பிரதிபலிப்பு வசூலிலும் தெரிகிறது. காந்தா படம் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ. 10.5 கோடியை கடந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.


