Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

‘கோட்’ படத்துல நானும் வந்து சிவகார்த்திகேயன் கிட்ட சொன்ன விஷயம்… சதீஷ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்! #THEGOAT

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒருவர் அல்ல, இருவர் அல்ல, ஏராளமான நட்சத்திர பட்டாளங்களை விஜய் நடித்த “கோட்” திரைப்படத்தில் இணைத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. இப்படம் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றதாகக் கூறலாம். படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா ஆகிய முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல், நடிகர்கள் பிரேம்ஜி, வெங்கட் பிரபு, வைபவ், அரவிந்த் ஆகியோரும் கேமியோ கதாபாத்திரங்களில் வெங்கட் பிரபு குழுவோடு இணைந்து நடித்திருந்தனர்.

இவர்கள் மட்டுமல்லாமல், திரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற லீட் நடிகர்களும் இப்படத்தில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரிஷா, விஜயுடன் இணைந்து “மட்டை” பாடலில் சூப்பரான குத்தாட்டத்தை ஆடினார். இதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் கிளைமாக்சில் வில்லனை எதிர்கொள்வதாகவும், அவர் வைத்திருக்கும் துப்பாக்கியை நடிகர் விஜய் அவருக்கு கொடுப்பதாகவும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் கோலிவுட்டில் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு நடிகர் விஜய் வழங்கியதாக பேசப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சதீஷ் நடித்துள்ள “சட்டம் என் கையில்” படத்தின் ப்ரமோஷனுக்காக ஒரு பேட்டியில் பேசிய அவர், “கோட்” திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து பேசினார். கிளைமாக்சில், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்தவுடன் விஜய் போன பிறகு, அந்த இடத்துக்கு வரும் நான், அப்போ நான் உங்க இடத்தை பார்த்துக்கட்டா…என்று கேட்கும் காட்சி அமைந்திருந்ததாகவும், ஆனால் அந்தக் காட்சியை எடிட்டிங்கில் நீக்கிவிட்டதாகவும் கூறினார். அப்போது, ஓடிடியில் நீக்கப்பட்ட காட்சிகளோடு “தி கோட்” வெளியானால், அதில் இந்த காட்சி இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News