மலையாள திரைப்பட நடிகர் துல்கர் சல்மான், மலையாள சினிமாவின் எல்லைகளை கடந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, அறிமுக இயக்குனர் ரவி இயக்கத்தில் துல்கர் சல்மான் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். மேலும், தெலுங்கு நடிகர் நாக சவுரியா இந்த படத்தில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவருடைய கதாபாத்திரம் வில்லன் ரோலில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படம் ஒரு வித்தியாசமான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், நடிகை பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திலும் நடித்து வருகிறார்.