தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றால் அது நயன்தாரா தான். தற்போது அவர் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரு குழந்தைகளுடன் துபாய்க்கு சென்று இருக்கிறார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024 விழாவில் கலந்து கொண்ட பிறகு, இன்னும் இந்தியாவுக்கு திரும்பவில்லை. அவர்கள் துபாயில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தினமும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் காது குத்திக் கொள்கிறார். காது குத்தும் கடைக்கு சென்ற நயன், தன்னுடைய விருப்பமான தோடை ஒன்றை தேர்ந்தெடுத்தார்.
பின்னர் அங்கு உள்ள ஊழியர்கள் அவருக்கு அந்த தோடை குத்தி விடுகின்றனர். இதன் போது, நயன்தாராவின் காதில் ரத்தம் வந்து விடுகிறது. அப்போது, விக்னேஷ் சிவன் “ரத்தமாறே” பாடலை பாடி க்யூட்டான ரியாக்ஷன் கொடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.