மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடித்த கமல்ஹாசன், சிம்பு, திரிஷா ஆகியோர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்தனர். அந்த நேரத்தில் கமல் பேசும்போது, ‘‘தக் லைப்’ திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய வகையில் உருவாகியுள்ளது.

மணிரத்னம் அவர்கள் தன் மனதில் வைத்திருந்த சினிமாவை இப்போது தான் இயக்கியுள்ளார். அவருக்கே உரிய ஸ்டைலில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அதேபோல நானும் எனது பாணியில் நடித்திருக்கிறேன். ‘நாயகன்’ படத்தின் சாயல் இந்த படத்தில் சற்றும் தெரியாது. இது ‘நாயகன்’ திரைப்படத்தின் தொடர்ச்சியல்ல என்பதையும் பல சந்தர்ப்பங்களில் தெளிவாக தெரிவித்துள்ளோம் என்றார்.
தொடர்ந்து கமல் கூறும்போது, “இப்போது இளம் தலைமுறை நடிகர்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். இதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மதிப்பாக நான் கருதுகிறேன். அவர்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என்பதே எனது ஆசை. அவர்களிடம் ‘நாங்கள் உங்களைப் பார்த்து கற்றுக் கொள்கிறோம்’ என்பதுபோல, நானும் அவர்களைப் பார்த்து பல விஷயங்களை கற்றுக் கொண்டுவருகிறேன். அண்மையில் நான் ஏஐ பற்றி கற்றுக்கொள்ள முயற்சித்தேன். ஆனால் அது நம்மை விட பெரியது என்று உணர்ந்தேன். அதைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ளாமல் நான் அதை பயன்படுத்த விரும்பவில்லை. வாழ்வில் இறப்பை தவிர்க்க முடியாது. ஆனால் உயிருடன் இருக்கும்போது நாம் செய்யக்கூடியவற்றை செய்து விடவேண்டும என்றார்.