அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘பருத்திவீரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியாமணி, அதற்காக தேசிய விருதைப் பெற்றார். திருமணத்துக்குப் பிறகும், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்திலும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் பிரியாமணி.
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “ஒரு முஸ்லிம் ஆணை திருமணம் செய்துகொண்டதனால், நான் மதம் மாறிவிட்டதாக சிலர் சோசியல் மீடியாவில் கூறி வருகிறார்கள். ஆனால், நான் திருமணத்திற்கு முன்பே என் கணவரிடம் மதம் மாற மாட்டேன் என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன். அதனால், இப்போது வரை இருவரும் தங்களது மத நம்பிக்கைகளை மதித்து, பின்பற்றி வருகிறோம்.
மேலும், நான் முஸ்லிம் ஆணை திருமணம் செய்ததனால், எங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. ஜாதி, மதத்தை கடந்து காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் எங்களைப் பற்றிப் பொய் கூறி, வெறுப்பு செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று பிரியாமணி கேட்டுக் கொண்டுள்ளார்.