Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நான் புடவை அணிய இதுதான் காரணம்… சாய் பல்லவி OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தற்போதைய முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவரது கியூட்டான முகபாவனைகள், திறமையான நடிப்பு மற்றும் தனித்துவமான அழகால் அவர் தன் பாதையில் சிறப்பாக முன்னேறி வருகிறார். கடைசியாக அவர் நடித்த “அமரன்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது; அதில் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களின் மனதை மிகுந்த மகிழ்ச்சியுடன் கவர்ந்துள்ளது.

சாய் பல்லவியின் எதார்த்தத் தோற்றமே ரசிகர்களை மிகுதியாக கவர்கிறது. பொதுவாக நடிகைகள் நிகழ்ச்சிகளில் அதிக அளவிலான மேக்கப்புடன் வருவார்கள், ஆனால் சாய் பல்லவி எப்போதும் எளிமையாக, அளவான மேக்கப்புடன் வருவார். இதனால் அவருக்கு தனித்துவமான ரசிகர்கள் அடிப்படையாக உருவாகியுள்ளனர்.

ஒரு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “நான் எப்போதும் புடவையில் வருவதே எனக்கு சௌகர்யமாக இருக்கும். ஏனெனில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது நம் உடை எப்படி இருக்கிறது என்பதில் பாதி கவனம் செல்கிறது; அதற்குப் பதிலாக, புடவையில் நான் வசதியாக இருப்பதால் என்ன பேச வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்த முடிகிறது என்றார்.

- Advertisement -

Read more

Local News