Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

பெப்ஸியுடனான ஒப்பந்தம் குறித்த அறிக்கையை வெளியிட்ட தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்ஸியும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகளால் மோதி வருகின்றன. சம்பள உயர்வுகள் மற்றும் திரைப்படத் தயாரிப்பு செலவுகள் தொடர்பாக, இந்த இரண்டு சங்கங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், யாரை வைத்தும் படம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பாரதிராஜா தலைமையிலான தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், பெப்சி தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்தி படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் இணைந்து, தொழிலாளர்களின் மறுசீரமைப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த உரையாடலின் பின்னணியில், பல்வேறு தொழிலாளர் சங்கங்களுக்கான மறுசீரமைப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இறுதியாக நியமிக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், இனிமேல் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் சேர்ந்த தொழிலாளர்களை மட்டுமே கொண்டு படப்பிடிப்பை நடத்துவது என உறுதியாக முடிவெடுத்துள்ளது. அதன்படி, சங்கம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புதிய மறுசீரமைப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வரவிருக்கும் மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News