Wednesday, September 25, 2024

தனது கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி ஜாலியாக கொண்டாடிய சின்னத்திரை பிரபலம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காதலித்து திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை பிரபலங்களான சித்து மற்றும் ஸ்ரேயா தம்பதி, தற்போது வள்ளியின் வேலன் தொடரில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்துவருகின்றனர். சின்னத்திரையில் பிரபலமான காதல் தம்பதிகளாகிய சித்து-ஸ்ரேயா அஞ்சனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “திருமணம்” என்ற தொடரில் முதல் முறையாக ஒன்றாக நடித்த இந்த இருவரிடையே அப்போது காதல் மலர்ந்தது.

திருமணம் தொடரில் நடித்ததன் மூலம் காதலித்து, பின்னர் நிஜ வாழ்க்கையிலும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், ஸ்ரேயா தனது கணவர் சித்துவின் பிறந்த நாளை தனிப்பட்ட முறையில் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார்.

அந்தக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார். சித்துவுக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News