ஆனந்த் ராஜ் மற்றும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். இதில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர்.
இப்படத்தில், முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு தாதாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையமாகக் கொண்டு, இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை அசோக்ராஜ் மேற்கொண்டு, இசையமைப்பை ஸ்ரீகாந்த் தேவா கவனிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருக்கிறது.