‘கேப்டன்’ விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப்பாண்டியன், 2015ஆம் ஆண்டு வெளியான ‘சகாப்தம்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். எனினும் அந்த படம் பெரிதான வரவேற்பைப் பெறவில்லை. அதன் பிறகு மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ‘மதுர வீரன்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் கூட பெரிதாக பேசப்படவில்லை.
தற்போது, அவர் மூன்றாவது படமாக நடித்துள்ள ‘படை தலைவன்’ படம் நாளை வெளியிடப்படுகிறது. இந்தப் படத்திலும் சண்முகப்பாண்டியன் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவே நடித்துள்ளார்.
விஜயகாந்த் ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்தாலே, அது வெற்றிப் படமாக மாறும் என நம்பப்படுகின்றது. படம் நல்லதாக இருந்தால் மற்ற ரசிகர்களும் விருப்பத்தோடு வந்து பார்ப்பார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் மூன்றே படங்களில் நடித்த சண்முகப்பாண்டியன், இந்த ‘படை தலைவன்’ படத்தின் மூலம் வெற்றி பெற்ற நடிகராக உருவெடுப்பாரா என்பது குறித்து திரையுலகத்தினர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.