நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்ததை தொடர்ந்து, இதற்கான அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. படத்தின் முழுமையான படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், படக்குழு ‘கூலி’ படத்தின் மேக்கிங் வீடியோவையும் பகிர்ந்திருந்தது.

‘கூலி’ படத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கிவரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் இருக்கும் புகைப்படத்தை, “பேட்ட, கூலி, ஜெயிலர்” என குறிப்பிட, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த மூன்று படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.