இதுவரை எந்த நடிகர், நடிகையும் செய்திராத அளவிற்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட்டும் இணைந்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மும்பையின் மைய பகுதியில் 6 மாடி வீடு ஒன்றை கட்டி உள்ளனர்.கடந்த சில வருடங்களாக இந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், இப்போது வீடு தயார் நிலைக்கு வந்திருக்கிறது. இந்த பிரமாண்ட வீட்டில் விரைவில் ரன்பீர் கபூர் தனது குடும்பத்துடன் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
