நடிகர் ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதையொட்டி திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து கவிதை வழியாக தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அவரது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்,
“50 ஆண்டுகள் ஒரே துறையில் உச்சத்தில் இருப்பது
அபூர்வம் ரஜினி, நீங்கள் ஓர் அபூர்வ ராகம்…
புகழும் பொருளும் உங்கள் உழைப்புக்குக் கிடைத்த
கூலி, ‘தொடரட்டும் உங்கள் தொழில்’ ‘நிலைக்கட்டும் உங்கள் புகழ்’… “இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது” என்று முத்து படத்தில் எழுதிய முத்திரை வரியால் வாழ்த்துகிறேன்” என வாழ்த்தியிருக்கிறார்.
