மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் #SSMB29 என்ற பெயரிடப்படாத படத்தை பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கி வருகிறார். இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா, மாதவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

படத்தின் கதைப்படி, ஹீரோ உலகம் முழுவதும் சுற்றி, அரிய மூலிகைகள் மற்றும் வேர்கள் போன்றவை தேடும் ஆளாக இருக்கிறார். இந்த கதாபாத்திரம் அனுமனை நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது. ஒடிசாவில் இந்த படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு நடந்துவிட்ட நிலையில், முக்கியமான ஒரு பகுதி காசி நகரத்தில் (வாரணாசி) படம் பிடிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு படப்பிடிப்பு நடத்த சிரமமாக இருக்கவே, ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் காசியின் வடிவத்தில் ஒரு பெரிய செட்டை அமைக்க ராஜமௌலி கேட்டுள்ளார்.
இந்த செட் ரூ.50 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதில் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அடுத்த கட்டமாக கென்யா நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.