திருக்குறளில் உள்ள அறத்துபால், பொருட்பால், இன்பத்துபால் ஆகியவற்றிற்கு கவிஞர் வைரமுத்து உரை எழுதியுள்ளார். அந்த நூலுக்கு ‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த நூலை வருகிற ஜூலை மாதம் 13-ந் தேதி வெளியிட உள்ளார்.இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, “‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’ நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார்.
